×

இசை நிகழ்ச்சியில் நடந்தது விரும்பத்தகாத நிகழ்வு!: 30 ஆண்டுகளாக நாம் ரகுமான் மீது அன்பு செலுத்தி வருகிறோம்.. திரை பிரபலங்கள் ஆதரவு..!!

சென்னை: மறக்குமா நெஞ்சம் இசை நிகழ்ச்சியில் ஏற்பட்ட குளறுபடிகளால் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானை பலர் விமர்சித்து வரும் நிலையில், திரையுலகினர் பலர் அவருக்கு ஆதரவாக கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். கடந்த 10ம் தேதி நடைபெற்ற மறக்குமா நெஞ்சம் இசை நிகழ்ச்சியில் நடந்த குளறுபடிகளால் பலர் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானை விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில், அவருக்கு ஆதரவாக நடிகர் கார்த்தி கருத்து தெரிவித்துள்ளார். 30 ஆண்டுகளாக நமக்கு ரகுமானை தெரியும். அவர் மீது நாம் அன்பு செலுத்தி வருவதாக தெரிவித்துள்ள கார்த்தி, இசை நிகழ்ச்சியில் நடந்தது விரும்பத்தகாதது என குறிப்பிட்டுள்ளார்.

இதனால் ரகுமானும் மனதளவில் பாதிக்கப்பட்டிருப்பார் என்றும் தனது பதிவில் அவர் தெரிவித்துள்ளார். குளறுபடிகள் நடந்த நிலையில் தமது குடும்பத்தினரும் அங்கு இருந்ததாக தெரிவித்துள்ள கார்த்தி, ஆனாலும் ரகுமான் பக்கம் இருப்பதாகவும், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் இதற்கான பொறுப்பை ஏற்றுக் கொள்வார்கள் என நம்புவதாகவும் அவர் பதிவிட்டுள்ளார். இதேபோல தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள நடிகை குஷ்பு, டிக்கெட் இருந்தும் தனது மகள் மற்றும் அவரது நண்பர்களை உள்ளே அனுமதிக்கவில்லை என தெரிவித்துள்ளார்.

நிகழ்ச்சி நடந்த இடத்திற்கு செல்லவே அவர்களுக்கு 3 மணி நேரம் ஆனதாகவும், இது எதிர்பாராது என்று குறிப்பிட்டுள்ளார். ஆனால் இதற்கெல்லாம் ரகுமான் பொறுப்பேற்க முடியாது என்றும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களின் தோல்வியே இதற்கு காரணம் என்றும் குஷ்பு தெரிவித்துள்ளார். ரகுமான் எப்போதும் அன்பையும், அமைதியையும் மட்டுமே தமது இசை மூலம் பகிர்ந்துள்ளார் என்றும் அவர் ஆதரவு தெரிவித்துள்ளார்.

The post இசை நிகழ்ச்சியில் நடந்தது விரும்பத்தகாத நிகழ்வு!: 30 ஆண்டுகளாக நாம் ரகுமான் மீது அன்பு செலுத்தி வருகிறோம்.. திரை பிரபலங்கள் ஆதரவு..!! appeared first on Dinakaran.

Tags : Raghuman ,CHENNAI ,AR Raghuman ,
× RELATED வியாசர்பாடியில் சிறுவனுக்கு கத்திவெட்டு